Wednesday, October 1, 2014

தலைப்பற்ற தாய்நிலம் - ஜூனியர் விகடன் விமர்சனம்

‘கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து

மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று

புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து

கவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து?’

என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன, இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். ‘மேரி எனும் மரியா’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000-ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் இல்லாமல் தமிழர் தரப்பு நியாயங்களுக்காக இவரது கவிதைகள் பேசின. இலங்கை அரசால் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டபோது, இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறினார் மஞ்சுள வெடிவர்தன. சிங்களத்தில் அவர் எழுதிய கவிதைகளை, ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளான ஃபஹீமா ஜஹான், எம்.ரிஷான் ஷெரீப் ஆகிய இருவரும் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

”சிங்களர் மூலம் நிகழ்த்தப்பட்ட அடாவடித்தனங்கள் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைச் சங்காரம் செய்தவாறு நிறைவடைந்த வேளையில், சிங்களத்தில் கவிதை எழுதுவதைத் தவிர வேறு எதனையும் செய்ய இயலாதிருந்தபோது நான் அதனைச் செய்தேன். தொடர்ந்தும் நான் சிங்களர்களில் ஒருவராக இருப்பதனால் சிங்களவரின் மனச்சாட்சியில் இருந்து விடுபடுவதற்கு என்னால் இயலவில்லை. ஆயினும், இந்தக் கவிதைப் புத்தகத்தைப் பொறுத்தவரை இது சொற்பமான சிங்களர்களின் மனச்சாட்சியின் வெளிப்பாடாகும்” என்று சொல்கிறார் மஞ்சுள வெடிவர்தன. இந்தக் கவிதைகள் சிங்களர்களின் மனச்சாட்சியில் சலனம் ஏற்படுத்தியதா எனத் தெரியாது. ஆனால், தமிழர் கண்ணீர் சிங்களர்களையும் நனைக்கத் தொடங்கியிருக்கிறது என்பதற்கு உதாரணமான எழுத்துக்கள்.

சித்ரவதை செய்யப்பட்டு, பழிவாங்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு மடிந்த தமிழர்களை, கழிவிரக்கத்தோடு பார்த்துக் கண்ணீர் சிந்தக் கூடியவராக மஞ்சுள வெடிவர்தன இல்லை. மனித உரிமை, போர்க்குற்றம், ஐயோ, கடவுளே…. என்று ஈழக் கொடூரத்தை இவர் பார்க்கவில்லை. ஈழ விடுதலையின் உண்மையான அரசியலை உணர்ந்தவராக, அதனை ஆதரிப்பவராக இவரது எழுத்துக்கள் மூலம் புரியவருகிறது. ‘எந்நாளும் யுத்தத் தீ தெற்கிற்கு கண்காட்சிதான்’ என்ற வரியில் அரை நூற்றாண்டு காலத் துன்பங்களை கொட்டிவிடுகிறார்.

அதனால்தான், அதிகாரம் மஞ்சுள வெடிவர்தனவை துரத்துகிறது. ஆனால், அவர் விடாமல் எழுதுகிறார். ‘ஆணியடிக்கப்பட்ட கரமொன்றால் கவிதையெழுதுவது எவ்விதம்?’ என்று கேட்டபடி எழுதியபடி இருக்கிறார்.

- புத்தகன் (ஜுனியர் விகடன் இதழ் - 25.06.2014)

”சிங்களர் மூலம் நிகழ்த்தப்பட்ட அடாவடித்தனங்கள் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைச் சங்காரம் செய்தவாறு நிறைவடைந்த வேளையில், சிங்களத்தில் கவிதை எழுதுவதைத் தவிர வேறு எதனையும் செய்ய இயலாதிருந்தபோது நான் அதனைச் செய்தேன். தொடர்ந்தும் நான் சிங்களர்களில் ஒருவராக இருப்பதனால் சிங்களவரின் மனச்சாட்சியில் இருந்து விடுபடுவதற்கு என்னால் இயலவில்லை. ஆயினும், இந்தக் கவிதைப் புத்தகத்தைப் பொறுத்தவரை இது சொற்பமான சிங்களர்களின் மனச்சாட்சியின் வெளிப்பாடாகும்” என்று சொல்கிறார் மஞ்சுள வெடிவர்தன. இந்தக் கவிதைகள் சிங்களர்களின் மனச்சாட்சியில் சலனம் ஏற்படுத்தியதா எனத் தெரியாது. ஆனால், தமிழர் கண்ணீர் சிங்களர்களையும் நனைக்கத் தொடங்கியிருக்கிறது என்பதற்கு உதாரணமான எழுத்துக்கள்.
சித்ரவதை செய்யப்பட்டு, பழிவாங்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு மடிந்த தமிழர்களை, கழிவிரக்கத்தோடு பார்த்துக் கண்ணீர் சிந்தக் கூடியவராக மஞ்சுள வெடிவர்தன இல்லை. மனித உரிமை, போர்க்குற்றம், ஐயோ, கடவுளே…. என்று ஈழக் கொடூரத்தை இவர் பார்க்கவில்லை. ஈழ விடுதலையின் உண்மையான அரசியலை உணர்ந்தவராக, அதனை ஆதரிப்பவராக இவரது எழுத்துக்கள் மூலம் புரியவருகிறது. ‘எந்தாளும் யுத்தத் தீ தெற்கிற்கு கண்காட்சிதான்’ என்ற வரியில் அரை நூற்றாண்டு காலத் துன்பங்களை கொட்டிவிடுகிறார்.
அதனால்தான், அதிகாரம் மஞ்சுள வெடிவர்தனவை துரத்துகிறது. ஆனால், அவர் விடாமல் எழுதுகிறார். ‘ஆணியடிக்கப்பட்ட கரமொன்றால் கவிதையெழுதுவது எவ்விதம்?’ என்று கேட்டபடி எழுதியபடி இருக்கிறார்.
- See more at: http://www.noolulagam.com/2014/06/21/168227/#sthash.kIqpE1hL.dpuf

‘கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து
மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று
புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து
- See more at: http://www.noolulagam.com/2014/06/21/168227/#sthash.kIqpE1hL.dpuf
‘கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து
மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று
புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து
கவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து?’ – என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன, இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். ‘மேரி எனும் மரியா’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000-ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் இல்லாமல் தமிழர் தரப்பு நியாயங்களுக்காக இவரது கவிதைகள் பேசின. இலங்கை அரசால் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டபோது, இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறினார் மஞ்சுள வெடிவர்தன. சிங்களத்தில் அவர் எழுதிய கவிதைகளை, ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளான ஃபஹீமா ஜஹான், எம்.ரிஷான் ஷெரீப் ஆகிய இருவரும் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளனர்.
- See more at: http://www.noolulagam.com/2014/06/21/168227/#sthash.kIqpE1hL.dpuf
‘கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து
மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று
புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து
கவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து?’ – என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன, இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். ‘மேரி எனும் மரியா’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000-ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் இல்லாமல் தமிழர் தரப்பு நியாயங்களுக்காக இவரது கவிதைகள் பேசின. இலங்கை அரசால் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டபோது, இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறினார் மஞ்சுள வெடிவர்தன. சிங்களத்தில் அவர் எழுதிய கவிதைகளை, ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளான ஃபஹீமா ஜஹான், எம்.ரிஷான் ஷெரீப் ஆகிய இருவரும் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளனர்.
- See more at: http://www.noolulagam.com/2014/06/21/168227/#sthash.kIqpE1hL.dpuf